Saturday, April 9, 2011

மக்கள் சக்தியுடன் வெற்றி கண்டார் ஹசாரே : ஊழல் ஒழிப்பு மசோதாவில் மத்திய அரசு பணிந்தது

புதுடில்லி: நாடு முழுவதும் எழுந்த அபார ஆதரவு அலை வீசியதை கண்டு மத்திய அரசு ஒரு தனிநபரின் நியாயமான, அர்த்தமுள்ள கோரிக்கைக்கு தானாக முன்வந்து பணிந்தது. அன்னா ஹசாரேயின் கோரிக்கை அனைத்தையும் ஏற்று புதிய அறிவிக்கை வெளியிட்டதையடுத்து 5 நாள் தொடர்ந்து இருந்த சாகும்வரை உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார் ஹசாரே. லோக்பால் மசோதா தொடர்பான விஷயத்தில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் நீங்காத உயர்ந்த இடத்தை பிடித்தார் ஹசாரே. 

இந்த போராட்டம் நம் மக்களுக்கானது என்றும் இது இன்னும் முடியவில்லை., உண்மையான போராட்டத்தின் இது ஒரு தொடக்கம் தான் , இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது என்றும் , மக்களின் ஒருமித்த ஆதரவு மற்றும் தியாகத்திற்கு கிடைத்த வெற்றி என்று இன்றைய போராட்டத்தை முடித்துக்கொண்ட ஹசாரே கூறினார். மத்திய அரசையே ஆட்டிப்படைத்த அவர் தனது வெற்றி அல்ல என்று மெத்தப்பணிவாக கூறி மேலும் தனது செல்வாக்கை மக்கள் மத்தியில் பெற்றுக்கொண்டார். 

முன்னதாக மத்திய அரசின் லோக்பால் தொடர்பான அறிவிக்கை நகல் அவரிடம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கூடியிருந்த மக்களிடம் பேசி தம்முடன் இணைந்து உண்ணாவிரதம் இருந்த ஆதரவாளர்களுக்கு குளிர்பானம் கொடுத்து, தாமும் தனது உண்ணாவிரதத்தை முடித்துகொண்டார்.

No comments:

Post a Comment